பக்கம்:இறைவர் திருமகன்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

இக்கதையைக் கூறி முடித்த இயேசுநாதர், "திருடர்களிடம் அகப்பட்டு அடிப்பட்டவனுக்கு இந்த மூவரில் யார் அடுத்தவன் என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

"அவனுக்கு இரக்கங் காட்டியவனே!" என்றான் அந்த நீதிநூல் அறிஞன்.

"அவனைப் போல் நீயும் நடந்துவா” என்று கூறினார். இயேசு நாதர். அந்த நீதி நூல் அறிஞன் நல்லறிவு பெற்றுச் சென்றான்.