பக்கம்:இறைவர் திருமகன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. திருந்திய பாவிக்கு விருந்து

வரிவசூலிப்பவர்களைக் கண்டாலே யூதர்களுக்குப் பிடிக்காது. வரிவசூலிக்கும் இந்த அதிகாரிகள் ரோமானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள். யூதர்களிடம் வரிவசூலித்து ரோமானியப் பேரரசர்க்கு அனுப்பிவைப்பது அவர்கள் வேலை. யூதர்கள் ரோமானியரின் அடிமை என்பதை நினைவுபடுத்தும் அவமானச் சின்னங்களாக இந்த வரி வசூலிக்கும் அதிகாரிகள் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிகாரிகள் நாணயமும் ஒழுக்கமும் நேர்மையும் மனிதாபிமானமும் அற்ற விலங்குகளாகவும் இருந்தார்கள். எனவே யூதர்கள் இவர்களைப் பாவிகளாகவே கருதினார்கள். இந்தப் பாவிகளின் வீட்டு வாயிற் படியில் காலடி எடுத்து வைப்பதே கேவலம் என்று நினைப்பவர்கள் யூதர்கள்.