பக்கம்:இறைவர் திருமகன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பாவிகளை ஏற்றுக் கொள்வார் என்னும் கருத்தையும், பழைய மதவாதிகள், பெரிய மகனைப் போல, திருந்த முற்படும் பாவிகளை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்ற பொருளையும் இக்கதை தெளிவாக விளக்குவதை மக்கள் உணர்ந்தார்கள். இயேசு நாதரின் அன்புத் தத்துவத்தை மிக எளிதாக அவர்களுக்குப் புரியவைத்தது இக்கதை.