பக்கம்:இறைவர் திருமகன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை அவர் கூப்பிட்டார். அது ஆவலோடு ஓடிவந்தது.

அவர் தம் பன்னிரண்டு சீடர்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். "உங்களில் யாராவது பெரியவராக வேண்டுமானால், அவர் எல்லாருக்கும் ஊழியராக இருக்க வேண்டும். இந்த உலகில் யார் மிகவும் எளியவராக இருக்கிறாரோ அவரே விண்ணுலகப் பேரரசில் மிகப் பெரியவராக இருக்க முடியும். ஆனால், நான் உங்களுக்கு ஒன்று கூறுவேன்: நீங்கள் பணிவு மிக்கவர்களாகவும், இந்தக் குழந்தையைப் போல என்னிடம் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லாவிட்டால், நீங்கள் விண்ணுலகப் பேரரசில் இடம்பெறவே முடியாது" என்று கூறினார்.

பன்னிரண்டு அன்பர்களும் வாய் திறவாமல், இயேசுநாதரையும் அந்தச் சிறு குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவருக்குத்தான் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு !