பக்கம்:இறைவர் திருமகன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. பாதகன் வீட்டு விருந்து

ஜெரிச்சோ என்ற நசரின் வழியாக இயேசு நாதர் சென்று கொண்டிருந்தார். ஊருக்கு வெளியே வந்து கொண்டிருக்கும்போதே, அவர் வரப்போகும் செய்தி ஊரெங்கும் பரவிவிட்டது. வழிநெடுகிலும் மக்கள் கூட்டங் கூட்டமாக நின்று அவரை வரவேற்கவும் அவர் வாழ்த்தைப் பெறவும், அவர் வருவதைக் காணவும் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

வீதி ஓரங்களில் இடித்து நெருக்கிக் கொண்டு நிற்பவர் பலர்; சாளரங்களிலும் வாயிற்படிகளிலும் ஏறிநின்று அவரை நன்றாகப் பார்க்க முயன்றவர் பலர்; வீட்டுக் கூரைகளிலேயே நின்று கொண்டு காணவிரும்பியவர் பலர்; இப்படியாக அவரைப் பார்க்கும் ஆவலுடன் மக்கள் கூடிநின்றார்கள். வழியில் வீதியோரமாக நின்ற ஒரு பெரிய மரத்தைக் கூர்ந்து நோக்கினார் இயேசுநாதர்.