பக்கம்:இறைவர் திருமகன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

வென்று அவன் மரத்தினின்றும் இறங்கினான். இயேசுநாதருக்கு விருந்து ஏற்பாடு செய்வதற்காகவும், அவர் வரும் போது தானே முன்னின்று வரவேற்பதற்காகவும் அவன் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.

சாச்சியசுக்கு அது அவன் வாழ்விலே ஒரு பெரிய நாள். எதிர்பாராத இன்பத் திருநாள். அவன் ஒரு பெரிய பணக்காரன்தான்; அருமையான வீட்டையுடையவன்தான். ஆனால் அவன் ஒரு பாவி. மக்களால் வெறுக்கப்படும் வரி வசூல் அதிகாரி. தன் அதிகாரத்தை அவன் முறையோடு செலுத்தியவனும் அல்லன். தன் அதிகாரத்தைத் தவறான வழிகளிலேயே பயன்படுத்தி மக்களைக் கசக்கிப் பிழிந்த மாபாதகன். அப்படிப்பட்ட தீயவனாகிய அவன் வீட்டுக்கு இயேசுநாதர் எழுந்தருள முன் வந்தது வியப்பாகவேயிருந்தது.

இயேசுநாதர் அவன் வீட்டுக்கு வந்து விட்டார். அவருடைய சீடர்கள் பன்னிருவரும் கூடவே வந்துவிட்டார்கள். சாச்சியஸ் அவர் எதிரில் வந்தான். அவன் உள்ளம் குறுகுறுவென்றது. எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றான். தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். தன்னைப் பற்றிய