பக்கம்:இறைவர் திருமகன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. திருவடியில் நறுமணத் தைலம்

ஜெரிச்சோ நகருக்கும் ஜெருசலம் நகருக்கும் இடையில் குன்றுகள் நிறைந்திருக்கின்றன. இந்தக் குன்றுப் பகுதியில் பெத்தானி என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. இந்தச் சிற்றூரில் இயேசுநாதரின் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மார்த்தா, மேரி, லாசரஸ் என்போராவர்.

இயேசுநாதர் ஜெருசலத்திற்குப் போகும் போதெல்லாம், பெத்தானிக்குச் சென்று அந்நண்பர்களைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். அவர் வரும் போதெல்லாம், அவருக்கு நல்ல உணவுகளைச் சமைத்துப் படைத்து இன்பங் காண்பாள் மார்த்தா. அவர் லாசரசோடு பேசிக் கொண்டிருக்கும் போது கூட இருந்து கவனித்துக் கொண்டிருப்பாள் மேரி.

விருந்து விழாவிற்காக ஜெருசலம் செல்ல நேர்ந்த போது, பெத்தானியில் தங்கியிருந்து நாள்