66
மணத் தைலத்தை எடுத்துச்சென்றாள். மெல்ல மெல்ல அவள் நடந்து சென்று இயேசு நாதரின் திருவடிகளில் அந்த நறுமணத் தைலத்தை ஊற்றினாள். பின்னர் தன் நீண்ட கூந்தலினால், அதைத் துடைத்தாள். இனிய நறுமணம் வீடெங்கும் நிறைந்து கமழ்ந்தது. இயேசுநாதர் குனிந்து பார்த்தார். மேரி தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். தன் மீது அவள் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டுவதற்காகவே அவள் இவ்வாறு செய்தாள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.
விருந்தினர் அனைவரும் மேரிக்கு இயேசு நாதரிடம் இருந்த அன்பினைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான ஜூடாஸ் இஸ்காரியட் என்பவன் இச்செயலைக் கண்டு தன் முகத்தைச் சுளித்தான்.
‘அந்த நறுமணத் தைலம் எவ்வளவு விலை யிருக்கும்' என்று அவன் எண்ணினான். அவன் பணத்தாசை கொண்டவன். 'காலடியில் இவ்வளவு விலையுயர்ந்த தைலத்தை அப்படியே போத்தலோடு கவிழ்த்து விட்டாளே;