பக்கம்:இறைவர் திருமகன்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. இறைமகன் சென்ற திருவுலர்

மேரி நறுமணத் தைலத்தால் இயேசு நாதரின் திருவடிகளைக் கழுவித் தன் கூந்தலினால் துடைத்த நிகழ்ச்சி நடந்ததற்கு மறுநாள் ஜெருசலம் நோக்கி இயேசுநாதர் புறப்பட்டார். தம் சீடர்கள் பின்தொடர அவர் ஆலிவ் மலையின் மீது நடந்து சென்றார். தம் சீடர்களில் இருவரை அவர் அழைத்து தமக்கு முன்னதாக விரைந்து செல்லச் சொன்னார்.

"அடுத்தாற்போல் இருக்கும் சிற்றூருக்குச் செல்லுங்கள். அவ்வூருக்குள் நுழைந்தவுடன் ஒரு சிறு கழுதை கட்டிக் கிடப்பதைக் காண்பீர்கள். இதுவரை மனிதர்கள் யாரும் ஏறிச் செல்லாத கழுதை அது. அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது ஏதாவது கேட்டால், பெருமானுக்கு அது தேவைப்படுகிறது என்று சொல்லுங்கள்.