பக்கம்:இறைவர் திருமகன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கொண்டு, மெல்ல மெல்ல முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தார். சீடர்கள் பின் தொடர்ந்து வந்தார்கள். ஜெருசலம் நெருங்க நெருங்க அவரைப் பின்தொடர்ந்து சென்ற கூட்டம் அதிகரித்தது. அம்மக்களில் சிலருக்கு முன்னிருந்த திருத்தூதர்களில் ஒருவர் வேதத்தில் மொழிந்திருந்த வாசகம் நினைவுக்கு வந்தது. உடனே அவர்கள், "டேவிட்டின் மைந்தர் வாழ்க இறைவன் பெயரால் வருபவர் அருளுக்குரியவரே! மேலானவர் வாழ்க!" என்று கூவினார்கள். உடனே கூடியிருந்த மக்கள் அனைவரும் அவ்வாழ்த்து மொழிகளைச் சேர்ந்து முழக்கினார்கள்.

மக்கள் கூட்டத்தினரில் பலர் முன்னால் ஓடிச் சென்று, தங்கள் மேல்சட்டைகளைக் கழற்றி தூசியும் புழுதியும் நிறைந்த அந்தப் பாதையில் வரிசையாய் விரித்தார்கள். ஓர் அரசருக்குரிய பாதையாக மாற்றுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். சிலர் மரக் கிளைகளை ஒடித்து இழுத்துவந்து வீதியின் இரு மருங்கிலும் கிடத்தினார்கள். ஒரு சிலர் நகரினுள் ஓடிச் சென்று அரசர் வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அங்கிருந்தோர்