பக்கம்:இறைவர் திருமகன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அல்லது மக்களிடமிருந்தா?" என்று கேட்டார் அவர்.

இந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று அவர்கள் சிந்தித்தார்கள். 'விண்ணுலகிலிருந்து கிடைத்தது என்று சொன்னால், அப்படியானால் நீங்கள் ஏன் ஜானை நம்பவில்லை என்று கேட்டுவிடுவார். மக்களிடமிருந்து கிடைத்தது என்று சொன்னால், மக்களின் பகையை அடைய நேரிடும். ஏனெனில் ஜான் இறைவனால் அனுப்பப்பட்ட முன்னறிவிப்பாளர் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு மாறுபாடாக நம் பதில் இருக்குமானால், நாம் அவர்களிடையே உள்ள செல்வாக்கை இழக்க வேண்டி வரும்.

இவ்வாறு குழம்பிய அவர்கள் நாங்கள் இதற்குப் பதில் சொல்வதற்கில்லை என்று கூறி விட்டார்கள். நானும் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கில்லை என்று மறுமொழி கூறினார் இயேசுநாதர்.

தொடர்ந்து இயேசுநாதர் ஒரு கதை கூறினார்.