பக்கம்:இறைவர் திருமகன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஒருநாள் தந்தை தன் மூத்த மகனிடம் சென்று “மகனே என் திராட்சைத் தோட்டத்தில் போய் வேலை செய்" என்று கூறினான்.

“நான் வேலை செய்ய முடியாது" என்று மறுத்துவிட்டான் அவன். ஆனால் தந்தை சென்றபின் தான் அவ்வாறு கூறியதற்காக வருத்தப்பட்டு, போய் வேலையைச் செய்தான்.

தந்தை தன் இளைய மகனிடம் சென்று திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யச் சொன்னான். "இதோ போகிறேன் அப்பா!" என்று கூறினான் இளையவன். ஆனால் அவன் வேலை செய்யப் போகவேயில்லை.

“இந்த இருமக்களில் யார் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியவன்" என்று கேட்டார் இயேசுநாதர்.

"மூத்த மகன்!" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

"ஜான் உங்களுக்கு நேர் வழியைப் போதித்த போது நீங்கள் அதை ஏற்க மறுத்தீர்கள். ஆனால் பாவிகளாகிய வரிவசூல்