பக்கம்:இறைவர் திருமகன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

மீண்டும் அந்தக் குடித்தனக்காரன் அதிக எண்ணிக்கையில் வேலைக்காரர்களை அனுப்பினான். அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டது.

கடைசியில் அவன் தன் மகனை அனுப்பினான். "என் மகனுக்கு அவர்கள் மரியாதை காட்டுவார்கள்" என்று அவன் நினைத்தான்.

ஆனால் அந்தப் பண்ணையார்கள் “இவன் அவனுடைய வாரிசு. வாருங்கள் இவனைக் கொன்று போட்டு வாரிசுரிமையை நாமே அடைவோம்" என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

அவனைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியில் இழுத்துச் சென்று வெட்டிக் கொன்று விட்டார்கள்.

"பண்ணைச் செந்தக்காரன் வரும்போது இந்தப் பண்ணையாட்களை என்ன செய்வான்?" என்று கேட்டார் இயேசுநாதர்.

"அந்தக் கொடியவர்களை ஒழித்துக் கட்டி, தன் பண்ணையை, ஒழுங்கான வேறு ஆட்களிடம் ஒப்படைப்பான்" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.