பக்கம்:இறைவர் திருமகன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

"கட்டிட வேலைக்காரர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே, மூலைக்கு முதற்கல்லாக அமைந்தது. என்று நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா? இதுதான் இறைவனின் செயல். இதுதான் நமக்கு ஆச்சரியம் தருவது.

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களிடம் ஒப்படைக்கப் பெற்ற இறைவனின் பேரரசு பறிக்கப்படும் அது பயன் கொடுக்கும் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

“இந்தக் கல்லின் மேல் விழும் யாரும் உறுப்பொடிந்து போவார்கள். யார் மேல் இந்தக் கல் விழுகிறதோ அவர்கள் நசுங்கித் தூளாகிப் போவார்கள்."

இந்தக் கதைகள் தங்களைத் தான் குறிக்கிறதென்று பெரிய குருமார்களும் பழைமைவாதிகளும் கண்டறிந்தார்கள்.

ஆனால் அவர்கள் இயேசுநாதரின் மேல் கை வைக்க அஞ்சினார்கள். ஏனெனில் மக்கள் இயேசுநாதரின் பக்கம் இருந்தார்கள். அம் மக்கள் இயேசுநாதரை ஆண்டவன் அனுப்பிய முன்னறிவிப்பாளராகக் கொண்டாடினார்கள்.