பக்கம்:இறைவர் திருமகன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. உழைத்தவர் பெற்ற உயர்வு

ஆலயத்திலிருந்து புறப்பட்ட இயேசு நாதர் பெத்தானிக்குப் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு மலைச்சரிவில் சிறிது நேரம் தங்கினார்.

அங்கிருந்து பார்க்கும்போது ஜெருசலம் ஆலயம் அழகாகத் தோன்றியது, வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அதன் அழகிய கோபுரம் ஒளிவீசிக் கொண்டிருந்தது.

இயேசுநாதரின் சீடர்களில் ஒருவன் “ஆலயத்தைப் பாருங்கள்! உயர்ந்த கற்களால் அது எவ்வளவு அழகாகக் கட்டப் பெற்றிருக்கிறது!" என்று அழகுணர்ச்சியுடன் கூறினான்.

இதைக் கேட்ட இயேசுநாதர், துயரத்துடன், “இங்கே ஒரு கல்லின் மேல் மற்றொன்று நில்லாத நாள் வரப் போகிறது" என்றார்.