பக்கம்:இறைவர் திருமகன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

இதோ அப்படியே கொண்டு வந்திருக்கிறேன் ஒரு காசு கூடக் குறையவில்லை; எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான்.

“ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிப் பயலே! நான் பொல்லாதவன் என்றுதான் உனக்குத் தெரியுமே, என் பணத்தை ஒன்றுக்கும் பயனில்லாமல் வீணாக வைத்திருந்தாயே அறிவற்றவனே. வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருந்தாலும் வட்டி வரும்படியாவது வந்திருக்குமே." என்று கூறி அந்தப் பணத்தைத் திருப்பி வாங்கினான். அதைப் பத்து நிறை வைத்திருந்த முதல் வேலைக்காரனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான்.

கதையைக் கூறி முடித்த இயேசுநாதர் தீர்ப்பு நாளிலும் இதே கதை தான் நடக்கும். ஆண்டவன் தங்களுக்குக் கொடுத்த ஆற்றலையும் திறமையையும் நன்கு பயன்படுத்தியவர்கள் அவனுடைய பாராட்டைப் பெறுவார்கள். திறமையைப்பயன்படுத்தாது சோம்பேறியாகக் காலங் கழித்தவர்கள், அவன் சினத்துக்கே ஆளாவார்கள்.