பக்கம்:இறைவர் திருமகன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இயேசுநாதர் மக்களிடையிலே நடமாடினார்; அவர்களுக்கு நல்லறிவுரைகள் போதித்தார். குருமார்களும் பழைமைவாதிகளும் அவரைக் கண்டு பொருமினார்கள் - புகைந்தார்கள். மக்கள் நடுவில் அவரைத் தொடவும் அஞ்சினார்கள். ஏதாவது மறைவிடத்தில் அவரைத் தனியாகப் பிடிக்கத் திட்டமிட்டார்கள். அவருடைய சீடர்களிலே ஒருவனை வசப்படுத்திவிட்டால் அவரை எளிதாகப் பிடிக்கலாம் என்று எண்ணினார்கள்.