பக்கம்:இறைவர் திருமகன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

யான முப்பது வெள்ளிப் பணமும் அவனிடம் இருந்தது.

இயேசுநாதர் தாம் இருந்த இடத்திலேயே எழுந்து நின்றார். ஒரு ரொட்டியைக் கையில் எடுத்தார். அதைப் பிய்த்துத் தன் சீடர்கள் ஒவ்வொருவருக்கும். ஒவ்வொரு துண்டு கொடுத்தார்.

“இதைச் சாப்பிடுங்கள், இதுதான் உங்களுக்காகக் கூறு போடப்பட்ட என் உடல், என் நினைவாக இதைச் சாப்பிடுங்கள்" என்றார்.

ஒரு கோப்பை திராட்சைச் சாற்றை எடுத்தார். இந்தக் கோப்பையில் உள்ளதை எல்லாரும் சிறிது சிறிது அருந்துங்கள். ஏனெனில் இதுதான் என் குருதி. உங்களுக்காகவும் வேறு பலர்க்காகவும் சிந்தப்படும் குருதி இது. என் நினைவாக இதைக் குடியுங்கள்."

சீடர்கள் இந்தச் சொற்களின் உட்பொருள் தெரியாமல் மயங்கினார்கள். அவர் அளித்த ரொட்டித் துண்டுகளையும் திராட்சைச் சாற்றையும் உட்கொண்டார்கள். துயரமும் அச்சமும் அவர்கள் உள்ளங்களை ஆட்கொண்டன.