பக்கம்:இறைவர் திருமகன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

“அஞ்சாதீர்கள் ! மனத்துயரம் கொள்ளாதீர்கள் ! நீங்கள் இறைவனை நம்புகிறீர்கள் ! என்னையும் நம்புகிறீர்கள் ! நான் உங்களுக்குரிய இடத்தை ஆயத்தம் செய்து வைப்பதற்காகப் போகிறேன். நான் போவது உங்கள் நன்மைக்காகவே. நான் போகா விட்டால் உங்களைக் காத்தாள்பவன் வரமாட்டான். புனித ஆவியாகிய அவன் வரும்போது நான் கூறிய அனைத்தும் உங்கள் நினைவுக்கு வரும்.

"நான் உங்களிடம் அன்பு கொண்டிருந்தது போல் நீங்கள் ஒருவரிடம் ஒருவர் அன்பு கொள்ளுங்கள். தன் நண்பர்களுக்காக உயிரைக்கொடுக்கக் கூடியவனிடம் உள்ள அன்பைக் காட்டிலும் பேரன்புடையவர் யாருமில்லை. இதுதான் என் கட்டளை. நீங்கள் என் நண்பர்கள். எனவே நான் கட்டளையிடுவதைச் செய்யுங்கள்."

விருந்து முடிந்தது. அதுதான் சீடர்கள் இயேசுநாதருடன் உண்ட கடைசி விருந்து. யாவரும் எழுத்து நின்று மாலைத்தொழுகைப் பாட்டைப் பாடினார்கள். பிறகு யாவரும் ஒன்றாக வெளிப்புறப்பட்டு வீதியில் நடந்து சென்றார்கள்.