பக்கம்:இறைவர் திருமகன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. காலைச்சேவலின் கூவல்

இயேசுநாதர் தம் சீடர்களுடன் ஆலிவ் மலையடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவர் தம் சீடர்களை நோக்கி, “இன்றிரவு என்னால் நீங்கள் அனைவரும் துன்பத்திற்காளாவீர்கள். ஏனெனில் ஆட்டிடையனாகிய நான் கொல்லப்படுவேன் என்றும், என் ஆட்டு மந்தைகள் சிதறிவிடும் என்றும் எழுதப் பெற்றிருக்கிறது. என்னைத் தனியாக விடுங்கள். யாரும் துணையில்லா விட்டாலும் என் தந்தை யாகிய இறைவன் என்றும் என்னருகில் இருப்பான்" என்றார்.

இதைக்கேட்ட பீட்டர், “பெருமானே ! எல்லாரும் உங்களைப் பிரிந்து சென்றுவிட்டாலும் நான் பிரியமாட்டேன். சிறைச்சாலைக்கானாலும், இறப்பின் வரையிலேனும் நான் உங்களைத் தொடர்ந்து வரக் காத்திருக்கிறேன்” என்று கூறினான்.