பக்கம்:இலக்கண வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பூரணர் (பொ. 123). அதில், “இது பன்னிரண்டடியான் பெருவல்லத்தைக் கூற வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா” என்று குறிப்பு வரைகிறார். ‘பெருவல்லம்’ என்ற பெயர் இல்லாக்கால் இப்பாடற் பொருள் எவ்வாற்றானும் காணற்கரிது. ஆதலால் ‘திறவு’ வேண்டுங்கால் தந்து செல்லும் ‘திறம்’ இளம்பூரணர் உடைமையாக இருந்துளது எனலாம்.

அவரே, '‘சூத்திரத்தாற் பொருள் விளங்கும்’ எனவும் (பொ. 585)விடுத்துச் செல்கிறார்.

சில வழக்காறுகள்:

இளம்பூரணர் காலத்து வழக்காறுகள் சில அவர் உரை வழியே அறிய வாய்க்கின்றன.

எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் வழங்குவதுபோல் ‘நம்பி’ என்னும் பட்டம் வழங்குதல் (எ. 155), மகப்பாலுக்காக ஆடு வளர்த்தல் (எ.220) புளிச்சோறு ஆக்குதல் (எ. 247) பேயோட்டுதல் (சொ.312) வெள்ளாடை மகளிர் உடுத்தல் (சொ. 412) தைந்நீராடல் (சொ. 50) குறித்ததொரு நாளில் கறந்தபால் முழுவதையும் அறத்திற்கென ஆக்குதல் (சொ. 50) ஆடு மாடுகள் தினவுதீரத் தேய்த்துக் கொள்ள ‘ஆதீண்டு குற்றி’ நடுதல் (சொ. 50) சேவற்சண்டை நடத்துதல் (சொ. 61) ஒற்றிக்கலம் (ஆவணம்) எழுதுதல் (சொ. 76) நெல்லடித்துத் தூற்றும் களத்திற்குத் ‘தட்டுப்புடை’ எனப்பெயர் வழங்குதல் (சொ, 77) வெற்றிலையும் பூஞ்செடியும் நடுதல் (சொ.110) பொழுதின் ஒரு பகுதியைக் கூறு எனக் கூறுதல் (பொ. 9) முதலிய வழக்காறுகள் ஆங்காங்கு அறிய வருகின்றன.

பல்துறைப் புலமை:

நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைக் கூறுவதும் (எ.ள 7), “கடுவும் கை பிழியெண்ணெயும் பெற்றமையான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/131&oldid=1471491" இலிருந்து மீள்விக்கப்பட்டது