122
“சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற
இன்றி யமையா தியைபவை எல்லாம்
ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே”
என்னும் மரபியற் சூத்திரத்தானே (103) “இவ்வாறே சூத்திரங்களை நலிந்து பொருளுரைப்பன வெல்லாம் கொள்க என எழுதுதல் இவர் உட்கோளைத் தெளிவாக்கும்.
“வரகு, கொற்றன் ஈரெழுத்தொரு ' மொழி; அகத்தியனார் ஐயெழுத்தொரு மொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத்தொரு மொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத் தொரு மொழி” என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரைநடைக் கோட்பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகி விடுகின்றது.
கரணம் வடநூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம் 86, 136 ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகைக் கரணம் ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும் கூட, "கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்பது பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா?
ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க்கினியர், “ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் ‘இடையெழுத் தென்ப யரல வழள (எழு. 21)