பக்கம்:இலக்கண வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

உணர்த்தக் கேட்டும் — கற்றும் — இருந்தும், இந்நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங் கூறியே விழுப்பம் எய்தினர் என்னும்போது அக்காலச் சூழலில் நச்சினார்க்கினியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை! நச்சினார்க்கினியர் புலமை, ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து’ என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக் காட்டுகள் எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள்.

“ஆய்தம் என்ற ஓசை தான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’ என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப” (நூன். 2).

“கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறத்த செவ்வண்ணம் போல நெடிலும் குறிதுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார்” (நூன். 6).

“அகரந் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின் ஒன்றேயாயும் பலவே யாயும் நிற்பதோர் தன்மையை யுடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவால் நிற்கும் தன்மையும் போல” (நூன்.8.)

“ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி யுப்பில் கலந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/170&oldid=1471529" இலிருந்து மீள்விக்கப்பட்டது