பக்கம்:இலக்கண வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

என்பார் உரைக்குமாறு என்று வரைந்து வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகமே செந்தமிழ் நிலம்” என்கிறார் (394).

பழங்கொல்லம் கடல் கொள்ளப் பட்டபின், இப்பொழுதுள்ள கொல்லத்தை “அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும்” என்கிறார் (396).

உரைநலம்

சில இடங்களில் இவர் தரும் விளக்கமும் எடுத்துக்காட்டும் நினைதோறும் இன்பம் பயப்பதாம். முன்னவர் உரைகளைத் தழுவியும் சார்ந்தும் பின்னவர் உரை காண்பதும் காட்டுவதும் வழக்கெனினும், அப்பின்னவர் உரைகளால் முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன. அவ்வகையில் தெய்வச்சிலையார் தனிச் சிறப்புக் குரியவராகச் சொல்லத் தக்கவர்.

'உண்டு' என்பதைப் பொதுவினை என்றும், சிறப்பு வினை என்றும் இரு வேறு வகையாகக் கொள்வர் உரையாசிரியர்கள். இவர் தக்க எடுத்துக்காட்டுகளின் வழியே பொதுவினை என்பதை நிலைப்படுத்துகிறார். அது முன்னை உரையாசிரியர்களின் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பார்வையின் விளைவாம்.

“ஊன் துவை, கறிசோ றுண்டு வருந்து தொழில் அல்லது, பிறிது தொழில் அறியா வாகலின் (புறநா. 14) என்ற வழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? ‘உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு’ (கலி. குறி. 15) எனவும், ‘பாலும் உண்ணாள் பழங்கண்கொண்டு’ (அகம், 48) எனவும், ‘கலைப்புற வல்குல் கழுகு குடைத் துண்டு’ (மணிமே. 6: 112) எனவும், ‘கள்ளுண்ணாப் போழ்து’ (திருக். 930) எனவும், ‘உண்ணாமை வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/184&oldid=1471551" இலிருந்து மீள்விக்கப்பட்டது