பக்கம்:இலக்கண வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

“விழுமம்,
சீர்மையும் சிறப்பும் இடும்பையும் சிறப்பும்”

எனப் பாடங்கொள்கிறார். இப்பாடம், இரு சார் கருத்தையும் ஏற்றுக் கொண்டு இவரே அமைத்துக் கொண்டதாகலாம் (349). அத்தகு கருத்துடையர் இவர் என்பது வினைமுற்றைப் பற்றி இவர் கொண்ட கருத்தி னால் வலியுறும்.

“வினைச்சொற்கள் முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மையன என்று எடுத்தோதி முற்றுச் சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற் றன்று. இஃதேல் வினையிலக்கணம் அறிந்தேன் ஆகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின் உரைக்குமாறு” என்று கூறி வினைமுற்றுப் பற்றிய மூன்று நூற்பாக்களையும் காட்டி உரை வரைகின்றார். இவ்வகையால் இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச் சிலையார் அமைந்து விடுகின்றார்.

இவ்விடப்பெயர்ச்சியிலும் பெயர்ச்சி வேண்டினார் விளக்கவுரை கண்ட கு. சுந்தரமூர்த்தியார்:

“இங்கனம் ஆய்ந்து வைத்த அருமை பாராட்டுக் குரியதாம். பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இது பற்றிச் சிறிதும் நினைந்திலர். இவ்வகையில் இவ்வுரையாசிரியர் பாராட்டிற்குரியரேனும் இம்மூன்று நூற்பாக் களையும் வினையியலின் முதற்கண் வைத்திருப்பின் இன்னும் நலமாக இருக்கும் என்பது கருத்து ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/186&oldid=1471554" இலிருந்து மீள்விக்கப்பட்டது