பக்கம்:இலக்கண வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________ 142

முற்றின் இலக்கணத்தைக் கூறாது முற்றுக்களுக்குரிய ஈறுகளை வினையியலின் முதற்கண் கூறுதல் பொருந்தாது ஆதலான் இவை ஆண்டிருப்பதே இன்னும் பொருத்த முடையதாகும்”.

விளக்கம்

உரிச்சொல் திரிசொல் இடைச்சொல் என்பவற்றின் அடையாளத்தை எளிமையாய் அதே பொழுதில் அருமையாய் விளக்குகிறார் தெய்வச்சிலையார், “உரிச்சொல்லோடு இதனிடை (திரிசொல்லிடை) வேறுபாடு என்னை எனின், உரிச்சொல் குறைச் சொல்லாகி வரும்; திரிசொல் முமுச்சொல்லாகி வரும்” என்கிறார் (395).

எல் என்பதை உரிச்சொல்லெனக் கொண்டார் சேனாவரையர். எனினும் உரியியலுக்கு மாற்றாமல், உரிச்சொல்லாகக் கொண்டே ஆசிரியர் வைப்புப் போல இடையியலில் வைத்துத் தம் கருத்தை எழுதியமை அவர் உரையுள் அறியப்பட்டது. அச்சொல் இடைச் சொல்லே உரிச்சொல் அன்று என்று தெளிவிக்கிறார் தெய்வச் சிலையார்.

“இது (எல்) உரிச்சொல் அன்றோ எனின், அது குறைச் சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல் ஆயிற்று” என்கிறார்.

எவரையும் பெயர் சுட்டி மறாமல் எழுதுதல் தெய்வச் சிலையார் வழக்கு. அவ்வழக்குப்படியே சேனாவரையரை இவண் குறியாதே உரைவரைந்தார்.

முறைவைப்புக் கூறுதலில் மிக நுணுக்கம் காட்டுகிறார் தெய்வச்சிலையார்:

பெயரை முதல் வேற்றுமை என்னாது எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே இயற்றி ஒருவற்குக் கொடுப்ப அவன் அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/187&oldid=1471555" இலிருந்து மீள்விக்கப்பட்டது