பக்கம்:இலக்கண வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236


உரை இயலும் வகை

இவர்தம் உரைப்போக்கு ஓர் ஒழுங்கு பெற்றது. முதற்கண் நூற்பாவைக் குறித்து, என்பது என் நுதலிற்றோ எனின், என வினாவி இன்னது நுதலிற்று என்கிறார். பின்னர் அந்நூற்பாவிற்குப் பொழிப்புரையோ சொற்பொருளோ வரைகின்றார்; இன்றியமையாமை ஏற்பட்டால் உரையின் இடையேயும் அதனை விளக்குகிறார்; உரை முடிந்ததும் அந்நூற்பாவில் அமைந்துள்ள இலக்கண அமைதியை ஆராய்கிறார்; சொல்லாராய்ச்சியையும் மேற் கொள்கிறார். இந்நூற்பா இவ்வாறு அமையினும் கருதிய பொருளைப் பயக்குமே. ‘இவ்வாறு சொல்ல வேண்டியது என்னை?’ என வினாவி, ‘இவற்றைக் கூறுதற்கு இவ்வாறு கூறினார்’ என உரைக்கிறார்.

சிற்சில இடங்களில் தடைகளைத் தாமே எழுப்பி விடைகளைக் கூறுகிறார். உடன்பாட்டிற் கூறப்பட்ட நூற்பாவை எதிர்மறையில் அமைத்துக் காட்டியும் அக்கருத்தை வலியுறுத்துகிறார். எடுத்துக்கொண்ட இலக்கணத்தை விளக்க உவமைகளையும் கையாள்கிறார். மேற்கோள், தவறாமல் காட்டுகிறார். மிக அருகியே ‘வந்துழிக் காண்க’ என்கிறார். இதே இலக்கணக் கருத்தை இவரிவர் இவ்விவ்வாறு கூறியுளர் எனத் தெளிவுறுத்துகிறார். அவ்வாறு கூறுதலிலும் நூற்பெயரையோ ஆசிரியர் பெயரையோ பெரும்பாலும் குறித்து விடுகிறார். சில இடங்களில் ‘என்றார் பிறரும்’ என்றும், ‘கூறினார் ஆகலின்’ என்றும், ‘ஒரு சார் ஆசிரியர்’ என்றும், ‘தொல்லாசிரியர்’ என்றும், ‘வடமொழி வழித்தமிழாசிரியர்’ என்றும் குறிக்கின்றார்.

காக்கைபாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார், தொல்காப்பியனார், மயேச்சுரர் ஆகியோர் நூற்பாக்களை மிகுதியும் ஆள்கிறார். ஒரு நூற்பாவின் உரைமுடிவில் அல்லது ஒரு பகுதியின் முடிவில் தாம் மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/271&oldid=1473767" இலிருந்து மீள்விக்கப்பட்டது