பக்கம்:இலக்கண வரலாறு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. பிரபந்தத் திரட்டு


இந்நூல் திரட்டியல் என்னும் ஓரியலே கொண்டதாக இருக்கிறது. ஆனால் ‘௧-வது திரட்டியல்’ எனத் தொடக்கத்திலும் ‘திரட்டியல் முடிந்தது’ என இறுதியிலும் உள்ள குறிப்பை நோக்க வேறு இயலோ இயல்களோ தொடர்ந்திருந்து அழிந்திருக்கக் கூடுமென நம்பலாம்.

நூல்

திரட்டியல் முடிந்தபின்,

“சாதகம் பிள்ளைத் தமிழ்பல் சந்தத்
திரட்டுக் கூடல் விசித்திர மதுவே”

எனத் தொடங்கி இத் திரட்டில், “கூறிய தொண்ணூற் றாறு பிரபந்தமும்” அடைவாகக் கூறிவிடுகின்றது. அம் முறையே முறையாய் நூலும் அமைந்துள்ளது. இந்நூற்பா 49 அடிகளால் ஆகியது.

இந்நூல் வெண்பா யாப்பால் அமைத்தது. இதிலுள்ள வெண்பாக்கள் 71. சில வெண்பாக்கள் விடுபட்டுள்ளன என்பதை அறியமுடிகின்றது.

தொண்ணுற்றா றான தொகைசேர் பிரபந்தம்
பண்ணுறப் பாடுவகை பாடுதற்கு—நண்ணுதுணை
தொந்திவயிற் றன் சிவன் சேய் சுப்பிரமண்

யன்துணைவன்

ஐந்துமுகத் தன்பொன் அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/439&oldid=1474536" இலிருந்து மீள்விக்கப்பட்டது