பக்கம்:இலக்கண வரலாறு.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

43. விருத்தப்பாவியல்



வீரப்ப முதலியார் என்பவரால் இயற்றப்பட்ட நூல் இது. இவர் சென்னை உயர்மன்றத்தில் வழக்குரைஞராக விளங்கியவர். 1938 இல் வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழ் விருத்தத்தின் வளர்ச்சியை மிக விரிவாக ஆய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் (11-32).

நூல்

“கன்ன லின்சுவை வேம்பங் கனியினால்
தந்ந லங்கள் சிறந்துத யங்கல் போல்
என்னின் நாவலர் ஏற்றம் விளங்குமால்”

என்பது போல அவையடக்கம் 7 பாடல்கள் பாடுகின்றார். விருத்தப்பாவியல் 12 படலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

அறுசீர்க் கழிநெடில் வகையை முதற் படலத்தில் அவ்வவ் விருத்தப் பாவால் விளக்குகிறார். இவர் இலக்கணம் அமைக்குமாறு:

“சீர்வளர் கமலச் செல்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
கார்வள மலிந்த கூந்தல் கன்னலும் கசக்கும் இன்சொல்
ஏரிளங் கொங்கை மின்னேர் இடையெழிற் கொடியம் பேதாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/475&oldid=1466747" இலிருந்து மீள்விக்கப்பட்டது