பக்கம்:இலக்கண வரலாறு.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

445

யினும் இக் கொளுக்கள் நானூற்றையும் ஒருங்கடைவு செய்தால் கோவை நூல் கிளவிகளின் ‘கொளுவடைவு’ நூல் ஒன்று வாய்த்தல் உண்மையாம்.

1. காட்சி : “மதிவாணுதல் வளர்வஞ்சியைக்

கதிர் வேலவன் கண்ணுற்றது.”

2. ஐயம் : “தெரிவரியதோர் தெய்வமென்ன

அருவரைநாடன் ஐயுற்றது.”

3. தெளிதல் : “அணங்கல்லளென் றயில்வேலவன்

குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.”

400. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்:

“இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர் மகிழ மேவுதலுரைத்தது.”

கொளு வஞ்சிநடை பயிலுதல் அறியத்தக்கது. எதுகை மோனை இயைந்து நடத்தலும் எண்ணத்தக்கது.

பழைய உரையும், பேராசிரியர் உரையும் கொளுக்களுக்கும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/490&oldid=1475094" இலிருந்து மீள்விக்கப்பட்டது