பக்கம்:இலக்கியக் கலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 8. கலைகளில் சிறந்தது இலக்கியக் கல்ை, கலையின் அடிப்படை கலையின் தோற்றத்தால், வாழ்க்கைக்கு ஏதேனும் பயன் உண்டா? மனித்ன் வேலையற்று இருக்கும்பொழுது, பொழுது போக்கின் நிமித்தம் கண்ட ஒன்றுதான் கலையென்று கூறப்படு கிறதா? இவ்வினாக்கள் மிகப் பழங்காலத்தொட்டுக் கேட்கப்ய்டு கின்றவையே யாகும். ஹேகல் போன்ற பெரியார்களின் கருத்துப் படி கலை மிகவும் ஆழமான பொருளுடையது. பொழுது போக்கிற்காக, ஆக்கப்படுவது அன்று கலை. அதன் அடிப்படைப் பொருள்; மனிதமனத்தின் ஆழத்தில் புதைத்து கிடக்கும் தன்மை களையும், அழியாத உண்மையின் தத்துவத்தையும், முருகிய லையும் வெளிப்படுத்தலேயாம். கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒரு வழியை மேற்கொண்டு முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார் ஆபர்காம்பி என்ற திறனாய்வாளர் - மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர் தங்கள் கருத்துக்களில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த பண்பாட்டை இன்று நமக்கு அறிவிக்கும் கருவியாகத் திகழ்வன. அவர்கள் ஆக்கிய கலைகளேயாகும். . இயற்கையிலும், உலகின் வளர்ச்சியிலும் காணப்படும் எந்த்' ஒரு சக்தி உண்டோ, அந்தச் சக்திய்ே கலையிலும்' வெளிப்படு கிறது. கலையின் குறிக்கோளும் அச் சக்தியை வெளிப்படுத்த முயல்வதே ஆகும். உலகிலேயே, இச் சக்தி காணப்படினும் தனிப் பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புக்களாலும், சமுதர்யக் கட்டுப் பாடுகளாலும் தோன்றி அழியும் உலக நிலையாலும் இச் சக்தியை நாம் நன்கு அறிய முடிவதில்லை, எனவே, கல்ை இச் சக்தியை மேலே கூறப்பட்டவற்றிலிருந்து பிரித்து நமக்கு வழங்க முற்படு: கிறது. நிலைபேறு இல்லாததும் மாறுந் தன்மை உடையதும்ான் உலகத்திலிருந்து, இச் சக்தியைப் பிரித்து ஒருவாறு நிலைபேறு உடையதும், உயர்ந்ததுமான மற்றொரு வடிவில் தந்து வ்ெளியிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/93&oldid=751312" இலிருந்து மீள்விக்கப்பட்டது