பக்கம்:இலக்கியக் கலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இலக்கியக் கலை கிறது. இவ்வடிவம் மனத்தின் கற்பனையிலிருந்தே பிறக்கிறது மனத்திலிருந்து பிறப்பதால் கலை அதிகமான உண்மையைத் தன்பால் கொண்டு இலங்குகிறது. இங்ங்ணம் கூறுவதால் கலையோ கலையின் வடிவேர், உண்மைக்கே ஒர் இருப்பிடம் என்று கொண்டு விடல் ஆகாது. ஏனையோரைவிடக் கலைஞன் உண்மையை மிகுதியும் கண்டிருப்பினும் அதனழியா அழகில் ஈடுபட்டிருப்பினும் அதற்கு ஒரு வடிவு கொடுத்து வெளியிடுகையில் மனக்கருத்து முழுவதையும் வெளிக் கொணர இயலாதன்றோ? உலகில் காணப் பெறும் பருப்பொருள்களாய கல், வர்ணம், திரைச்சீலை முதலிய வற்றிற்கு உள்ள குறைபாடுகளைக் கலைஞன் போக்கிவிட முடியா தாகலின், அவன் ஆக்கிய கலையும் ஒரளவு குறைபாட்டோடேயே விளங்கும். அறிவின் எல்லைக்கு உட்பட்ட பொருள்களைக் கொண்டே, கலை ஆக்கப்படுகிறது. எனவே, அப் பொருள் களுக்குள்ள குறைவு நிறைவுகள் கலையினிடத்தும் காணப்படும். மற்றப் பொருள்களோடு ஒப்பிடாத உண்மை. அதிகமாக வெளிப் படும் இயல்பு கலையினிடத்தே காணப்படும் என்பதே துணிவு. கலைஞனுக்குக் கட்டுப்பாடில்லை கலை இத்துணைச் சிறந்ததாயினும், அது தோன்றும் இடம் மனிதனின் படைக்கும் சக்தியிலேயே ஆகும். அந்தப் படைக்கும் சக்தி தானாக அமைந்தால் ஒழியக், கற்றுக் கொடுக்கும் இயல்பினது அன்று. கவிக்சக்ரவர்த்தியும் பாரதியாரும். ஞான் சம்பந்தரும், நம்மாழ்வாரும் மிக்க இளம் பருவத்திலேயே கவிஞர் களாகத் திகழ்ந்தனர். ஆதலின் கலைஞனுக்கு வயது, அநுபவம் முதலிய கட்டுப்பாடுகள் தேவை இல்லை. மேனாட்டு இசை உலக மன்னனாகிய பீத்தோவன் முழுச்செவிடு என்பது இதனை வலியுறுத்துகிறது. கலைஞன் மனத்தில் மறைந்து கிடக்கும் இச் சக்தி பொள்ளெனத் தோன்றுகையிலேயே கலை உண்டாகிறது. அக் கலையின் வடிவமும் உட்பொருளும் கலைஞன் மனத்தின் ஆழத்திலிருந்தே வெளிப்படுகின்றன. இங்ங்னம் மனித இனத்தின் ஆழத்திலிருந்தே கலை, தோன்றுகிறது என்றால், ஏன் தோன்றுகிறது என்ற வினா அடுத்து வருமன்றோ? அதற்கு விடை பலர் பலவாறாகத் தந்துள்ளனர். மனிதன் கலையை ஆக்கித் தீ ர வே எண் டி ய: இன்றியமையாமை உண்டர் இல்லை. அவனுடைய பல்வேறு. பயனற்ற செயல்களில் இதுவும் ஒன்றா! உண்மையை ஆராயு மிடத்துக் கலையைத் தோற்றுவிக்கும் இன்றியமையாமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/94&oldid=751313" இலிருந்து மீள்விக்கப்பட்டது