18 இலக்கியக்கேணி
அற்புத நிகழ்ச்சிகள்
புகலுரில் செங்கல் பொன்னகப் பெற்றது - வன் ருெண்டர் அம்பொன் அதிகம் பெறும் புகலூர் (18) தென்புகலூர் அரன்பால் செம்பொன் கொள்ளவல்லான்’ (57) என்ற பாடற் பகுதிகளாலும், திருப்பதிகம் பாடித் திருவருளால் காவிரி வழிவிட்ட அற்புதம்-செந்தமிழ் பாடிப் படர் புனலிற் சிந்திப்பரியன சேவடி* பெற்ற வன்’ (32) என்றதாலும், ஆற்றில் இட்ட பொன் குளத் தினிற் பெற்றது- *
செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெ ய்ய மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப் பொழிநீ டருதிரு வாரூரில் வாசியும்பொன் னுங்கொண்டோன் கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே:
என்ற 77 ஆம் திருப்பாடலாலும், முதலையுண்ட பாலனை யழைத்தது
கொடுத்தான் முதலேகொள் பிள்ளைக் குயிர் அன்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுரகவி அவிநாசியை' (63)
என்பதாலும், திருமுருகன் பூண்டியில் சிவகணங்கள் கொள்ளையடித்தமை-வேடர் சுற்றம் படுத்தான் திரு முருகன் பூண்டியினில் (68) என்பதாலும் அறியலாம். திருவொற்றியூரினின்று வரும் சுந்தரர் சோழ நாட்டுத் திருத்துருத்தி எனும் தலத்தருகே வந்த பொழுது புதிய ஒரு பிணியின் அறிகுறி காணப்பட்டது என்றும், தான் முன் செய்த சபதத்தைப் பிழைத்தமையால் இப்பிணி
- சேவடி-திருவருள். + படுத்தான்-பறிக்கப்பட்டான்.