72 இலக்கிய க்கேணி
குன்றின் கண் எழுதிய அழகையுடைய அம்பலம், காமவேள் அம்பின் தொழில் நிலைபெற்ற சிரமச்சாலே (படைக்கலக் கொட்டிலே) ஒக்கும். (28-29)
சோலைகளும் சுனைகளும், மலர்களின் செறிவால், காமவேளது அம்பருத்துாணியை ஒக்கும். (30-33)
கார் காலத்தில் தோன்றும் காந்தட்குலைகள், போரில் தோற்றுக் கட்டுண்டார் கையை ஒக்கும். (34-35)
தும்பியினல் கட்டவிழ்ப்பனவாகிய காந்தளின் முகைகள், யாழ்நரம்பினது கட்டை நெகிழ்ப்பவர் கையை ஒக்கும். (86-87)
பரங்குன்றிலுள்ள மரங்கள், இந்திரவில்லாற் சொறி யப்படும் கணைகளைப் போல மெல்லிய் மலரைப் பரப்பின. (40-41) - - - - ==
தாளம் ஒலிக்கும் ஒலியும், சிறந்த இயங்களின் ஒலி யும், மேகத் தொகுதியின் ஒலியும், போர் முழக்கத்தைப் போல எழுந்தன. (42-45) -
அருவிகள் ஒலித்து இழிவதால் மலைச்சிகரங்கள் முத்து மாலையை அணிந்தாற் போன்றன. (46). --
குருவிகள் ஆர்க்குமாறு தினக் கதிர்கள் விளக் தன. (47)
பலகிற மலர்கள் நிறைந்த சுனை, வானவில்லை வளைத்த வானை யொத்தது. (48-50) . . .