பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
மாக்கோதை

மிழ் மன்னர் தாம் வெற்றி பெற்ற போர்க்களப் பெயர்களைத் தம் பெயர்களோடு இணைத்து வழங்கிப் பெருமை கொண்டாடுவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் போன்றவை சில எடுத்துக் காட்டுகளாம். இதனைப் போன்றே அம்மன்னர்கள், இறந்த இடங் களையும் அவர் பெயர்களோடு இணைத்து வழங்கு தலும் உண்டு. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி போன்றவை சில எடுத்துக் காட்டுகளாம்.

சேர நாட்டில் கோட்டம்பலம் என்றோர் ஊர் உண்டு. அஃது இப்போது அம்பலப்புழை என வழங்குகிறது. இவ்வூர் பழங்காலச் சிறப்பு வாய்ந்தது. இதையடுத்து மாக்கோதை மங்கலம் என்ற பெயருடைய ஒர் ஊரும் இருக்கின்றது. மாக்கோதை என்னும் சேர மன்னன் ஒருவன் தன் இறுதிக்காலத்தில் அக்கோட்டம் பலத்தில் வாழ்ந்து உயிர் விட்டான். எனவே, அவனைக்