பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 புலவர் கா. கோவிந்தன்



பரற்கற்கள் உறுத்தும் பாழ்ந்தரையில் பாய் இல்லாமல் படுத்து உறங்கி, உள்ள நாளளவும், உறுதுயர் பொறுத்து நோன்பு மேற்கொண்டு வாழ்பவர் கடையாய கற்புடையாராவர். அவருள் தலையாய கற்புடையார் வரிசையில் வைத்துப் போற்றும் வாய்ப்பு எனக்கு இல்லாது போயிற்று. அவ்வாய்ப்பு இழந்த யான், அவருள் இடையாயர் பெறும் பெருநிலையினையாவது பெறுதல் வேண்டும்; அவர் உயிரோடு போதல்செல்லா உயிரோடு இருந்து பழியுற்ற யான், போகாத அவ்வுயிரைப் போக்கியேனும் புகழ் பெறுதலே பின்பற்றத் தகுவதாம்; அதுவே பேரறமாம்!” எனத் துணிந்தாள்.

காட்டின் நடுவே அமைந்திருந்த காடுகிழாள் கோயில் முன், கரிய கட்டைகளைக் கொண்டு பிணப் படுக்கை ஒன்று அமைக்கப் பணித்தாள். அவ்வாறே ஆங்கு அவள் தீப்பாய்தற்காம் பெருந்தீ எழுப்பப் பட்டது. உயிர் மாசு துடைக்கத் துணிந்த பெருங் கோப்பெண்டு, உடல் மாசு போகக் குளித்துவிட்டு, நீர் ஒழுகும் மயிர் இரு பக்கமும் தொங்கச் சுடுகாடு நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

பாண்டியன் அவைக்களப் புலவர்களுள் ஒருவராய பேராலவாயர் அக்காட்சியைக் கண்டார். காடுகிழாள் கோயில் முன், அக்காட்டு வாழ் மக்கள், யானைகள் கொண்டு வந்த விறகினால் தீ மூட்டி வாழ்ந்ததையும், காட்டுக் கொடுவிலங்குகளுக்கு அஞ்சும் மானினங்கள் ஆங்குவந்து அத்தீயின் ஒளியில்