பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 27



அறவுரை பலவற்றுள்ளும், அரசன் ஒருவன் அவன் குடிகளிடத்தில் வரி வாங்கும் வகை குறித்துக் கூறிய அறவுரை அருமையும் பெருமையும் வாய்ந்த அறிவுரையாகும்.

“நெல் விளையும் நிலம், மா எனும் அளவினதாகி நனிமிகச் சிறிதாயினும், அச்சிறு நிலத்தையும் நன்கு பயிரிட்டு, அது தரும் நெல்லைப் பேணி வைத்து, நாளொன்றிற்கு இவ்வளவு என முறை வகுத்துக் கொண்டு பங்கிட்டுத் தரின், அச்சிறு நிலத்தில் விளைந்த சில நெல்லே, ஒரு யானையின் பல நாள் உணவாய் அதன் பசி போக்கத் துணை புரியும். ஆனால், அளந்து காண இயலாது, பயிர்வேலி எனக் கூறத்தக்க பரந்த நிலத்தில் நெற் பயிரை விளைவித்துவிட்டு, அது நன்கு வளர்ந்து நிற்கும் காலத்தில் அப் பயிரினிடையே யானையொன்றை அவிழ்த்துவிட்டு, அது தன் விருப்பம்போல் உண்ணுமாறு செய்து விடின், பல யானைகளுக்குப் பல ஆண்டுகட்கு உணவாகப் பயன் அளிக்கவல்ல அப்பரந்த நிலத்தின் நெற்பயிரெல்லாம், ஒரே நாளில் ஒரே நாழிகையில் பாழாகிவிடும். யானையின் வாயுட் புகுந்து உணவாகிப் பயன்படும் நெல்லிலும் அதன் காற்கீழ்ப் பட்டுப் பாழாகும் நெல் நனிமிகப் பலவாம். அதைப் போலவே, நாடாளும் அரசர், அரசியல் அறிவுடையராகித் தம் குடிகளின் பொருள் நிலை அறிந்து, எவ்வளவு பொருள்களை அவர்களால் தர இயலும், அப் பொருள்களை அவர் வருந்தாவாறு பெறுவது எவ்வாறு என்பனவற்றை