பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 புலவர் கா. கோவிந்தன்



பகைவரால் உண்டாம் தீங்கும் அவன் நாட்டார்க்கு இல்லையாயிற்று. எனவே, அவன் நாட்டில், எங்கும், எக்காலத்தும் அமைதியே நிலவிற்று. அவன் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அமைதி நிலவிற்று. வீட்டில் உள்ளார் அனைவரும் ஒத்த உளம் உடைய ராயினர். ஒருவர் எண்ணுமாறே ஏனையோரும் எண்ணுவராயினர். அவரவர், அவரவர் கடன் அறிந்து வாழத்தொடங்கினர். மனைவியர் மனைமாண்புகளால் மாட்சிமையுற்று விளங்கினர். மக்கள் மனையறத்தின் நன்கலங்களாய்த் திகழ்ந்தனர். இதனால், அவன் நாட்டில், மக்கள் தம் மனத்தில் கவலையில்லாது வாழ்ந்தனர். கவலையற்ற அவர்கள், பிணியற்றவ ராயினர். பிணியற்ற வாழ்வுடைமையால், ஆண்டு முதிர்ந்த பெரியோர்களும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் போல் காட்சியளித்தனர். மக்கள் நரை திரை பெறா நல்லுடல் பெற்று நீண்ட பெருவாழ்வுடையராய் விளங்கினர். அறிவுடை நம்பியின் அரச அவைக்கு நாள்தோறும் சென்று நல்லறம் உரைத்து வாழும் இயல்பினராய பிசிராந்தையாரே அவன் நல்லாட்சி யின் இந்நனி சிறப்பினைத் தாம் பாடிய பாட்டொன்றில் நாவாரப் பாராட்டியுள்ளார்.

இவ்வாறு அறிவன அறிந்தும், ஆன்றோர் காட்டிய அறவழி நின்றும் நாடாண்ட நம்பி, அறநெறிகளைத் தான் மட்டும் அறிந்திருப்பது போதாது; அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும்; அவர்களும் அறம் நிறைந்த