பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 புலவர் கா. கோவிந்தன்



பெற்றோரும் உளரோ? அம் மக்கள் தம் அழகால், அவர்தம் ஆடலால், அவர்தம் மழலையால் மனம் மகிழ்ந்து அம்மகிழ்ச்சியின் மிகுதியால் அறிவு மயங்காப் பெற்றோரும் உளரோ?” எனக்கூறி, மக்கட் பேற்றின் மட்டிலா மகிழ்ச்சியினையும் அவர்க்கு அறிவித்தான். இவ்வாறு மக்கட் பேற்றினால் உண்டாம் மாண்பு, அதனால் அடையும் மகிழ்ச்சி ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிவித்து, அறிவுடை நம்பி எழுதிக் காட்டிய ஓவியம் எக்காலத்திலும் எந்நாட்டு மக்களும் போற்றும் நல்லதோர் இலக்கிய ஓவியமாய் அமைந்திருத்தலை அறிந்து அகமகிழ்வோமாக!