பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 51



கணைக்கால் இரும்பொறையின் காலத்தில், சேர நாட்டை அடுத்த ஒர் இடத்தே, மூவன் எனும் பெயருடைய வீரன் ஒருவன் இருந்தான். அவனும் இரும்பொறையும் ஏனோ பகைத்துக் கொண்டனர். கணைக்கால் இரும்பொறை அவனை வென்று கைப்பற்றினான். அவன் ஆண்மை அடங்குமாறு அவன் பற்களைப் பிடுங்கினான். அவனை வென்ற தன் ஆற்றற் சிறப்பினைப் பின்னுள்ளோரும் அறிந்து போற்றுமாறு, அப்பற்களைத் தன் தொண்டி நகர்க் கோட்டையின் வாயிற் கதவில் அழுத்தி வைத்தான். கணைக்காலிரும்பொறையின் இவ்விரு பேராண்மை களையும், அவன் நண்பரும், அவன் அவைக்களப் புலவருமாய பொய்கையார், தாம் பாடிய பாட் டொன்றில் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், அக்காலை சோணாடாண்டிருந்த செங்கணான் என்பான், கணைக்காலிரும்பொறை யோடு பகை கொண்டான். தமிழ்நாடு, பண்டு பெற்றிருந்த பெருமை இழந்து, சிறுமையுற்றதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும், தமிழரசர் மூவரும், தம்மிடையே ஒற்றுமை கொண்டு உலகாள்வதற்கு மாறாகப் பகை கொண்டு, ஒருவரை யொருவர் அழித்து வந்தமையே தலையாய காரணமாம் சேர, சோழ பாண்டியராய அம்மூவேந்தர் குடிகளுள், ஒரு குடியில் வந்த ஓர் அரசன், தன் அறிவு, ஆண்மை, கொடை, குணம் இவற்றால் சிறந்துவிடுவானாயின், ஏனைய இரு பேரரசர்களும்