பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 புலவர் கா. கோவிந்தன்



போல், செந்நீர் வெள்ளத்தால் சிவந்து தோன்றும் அப் போர்க்களத்தின் இடையிடையே யானையின் உடல்கள் வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

பேய்க்காற்று வீசிய பனங்காட்டில், பனங்காய்கள் சிதறிக் கிடப்பனபோல், போர்க்களமெங்கும் வீரர் களின் வெட்டுண்ட தலைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சி ஒருபால்.

ஐந்தலை நாகத்தைத் தன் வாய் அலகுகட் கிடையே பற்றிப் பறக்கும் கருடனைப்போல், ஐந்து விரல்களும் அறுபடாதிருக்க, அறுந்து வீழ்ந்த வீரர் தம் கைகளைக் கவ்விக்கொண்டு, பருந்துகள் பறக்கும் காட்சி ஒருபால்.

இவ்வாறு களம் காட்சி தர, தன் படையையும், படைத் தலைவரையும் பழையன் பாழ் செய்வது அறிந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை கடுஞ்சினங் கொண்டு, களம் புகுந்து, பெரும் போராற்றிப் பழையனைக் கொன்றான். தன் படைத் தலைவன் பட்டான்; அவனை மாளப் பண்ணினான் கணையன் என்பது கேட்டுச் செங்கணான் விரைந்து களம் புகுந்தான்; கடும் போராற்றினான்; கணைக்கால் இரும்பொறை களைத்திருக்கும் சமயம் நோக்கிக் கைப்பற்றிக் கொண்டு போய்க் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான்.

சிறை வைக்கப் பெற்ற சேரன் கணைக்கால் இரும்பொறை, ஒருநாள் சிறைக் காவலரை விளித்துத்