பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 55



தண்ணிர் தருமாறு பணித்தான். அவர்கள், அவனும் ஒரு கைதியே என்ற எண்ணம் உடையவர். ஏனைக் கைதிகள்பால் நடந்து கொள்வதே போல், அவன் கேட்ட அப்போதே தண்ணிர் கொண்டு வந்து தராது, காலம் கடந்து சென்று தந்தனர். தரும்போதும், அவன் ஒர் அரசன் என்ற எண்ணம் அற்றுப் பணிவின்றித் தந்து சென்றனர். சிறைக் காவலர் தம் செயல் கண்டு சேரன் வருந்தினான். அவர் செய்த இழிவு, அவன் உள்ளத்தை உறுத்திற்று. தந்த நீரை உண்ணாது ஒருபால் ஒதுக்கி விட்டான்; அவன் உள்ளம் ஆழ்ந்த சிந்தனையுள் ஆழ்ந்து விட்டது.

“வென்று விழுப்புகழ் பெறாது, பகைவனால் பற்றப்பட்டு, அவன் சிறையகத்து வாழ்வது இழிவாம். அந்நிலையில் பகைவன் பின் சென்று, பணிந்து, பல்லைக் காட்டி வாழ்வது அதனினும் இழிவாம். அந்நிலையுற்ற அக்கணமே, உலக வாழ்வை வெறுத்து, உயிர் துறந்து விடுதல் உயர்ந்தோர் போற்றும் உரனுடையார்க்கே உண்டாம். தம் நிலை தளரும் காலம் வந்துற்றக்கால், மானத்தை இழந்து, உயிர் வாழ எண்ணாது, உயிரை விட்டு, மானத்தைக் காப்பர் மாண்புடையார். ஆனால், அந்தோ! என் நிலை யாது: போரில் தோற்றேன்; உயிர் போயிற்றிலது. பகைவனால் பற்றப்பட்டேன்; என் உயிர் பிரிந்திலது. சிறையில் வாழ்கிறேன்; சிந்தை நொந்தேனல்லேன்; உயிர் துறக்கத் துண்iந்தேனல்லேன். உண்ணாமை மேற்கொண்டே னல்லேன். மாறாகப் பகைவர் தாமே தராதிருக்கவும்,