பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 61



அவன் புகழே கூறிக் கொண்டிருந்தார். “என் நண்பன், உறையூரிலிருந்து உலகாளும் உரவோன், கோப்பெருஞ் சோழன் எனும் பெயருடைய கோவேந்தன். புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார் போலும் புலவர் சூழ வாழும் பெரியோன்!” என்றெல்லாம் கூறிப் பெருமை கொள்வார். ஒரு நாள் மாலைக் காலத்தே, தம் மனையகத்தே இருந்து வெளியைப் பார்த்திருந்த போது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் அன்னப் பறவைகளைக் கண்டு, “குமரியாற்று மீன் உண்டு இமயம் நோக்கிச் செல்லும் அன்னப் பறவைகாள்! செல்லும் வழியில், இடையே சோழநாடு என்ற நாடொன்றுளது; அதன் தலைநகர் உறையூர்க் கண், என் உயிர் நண்பன் கோப்பெருஞ் சோழன் உளன்; அவ்வூர்ச் சென்று, அங்குள்ள அரசன் கோயிலுள், எவரையும் கேளாதே புகுந்து, அரசனைக் கண்டு, யாம் ஆந்தையாரை அறிவோம்; அவர்பால் மாறா அன்புடையேம்! என்று கூறின், அவன்தும் மனைவியர் அணியத்தக்க அழகிய அணி பல அணிவித்து அனுப்புவன். அத்துணை அன்புடையானைக் கண்டு செல்வீரோ?” என்று கூறிய கூற்று, பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழன்பால் கொண்டிருந்த நட்பின் பெருமையினை நாடறியச் செய்வது காண்க.

இவ்வாறு புலவர் போற்ற, நட்பின் பெருமை யினை நாவாரப் புகழ்ந்து கொண்டிருந்த கோப்பெருஞ் சோழன் வாழ்வில், குறையொன்று நிகழ்ந்தது. “தந்தையர் ஒப்பர் மக்கள்” என்ற முதுமொழியைப்