பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 புலவர் கா. கோவிந்தன்



உடையையாதலின் ஒரு வேளை, அவர் வெற்றி பெற, நீ தோற்று நிற்பையாயின், அது நினக்குப் பெரும் பழியாமன்றோ? இவற்றை யெல்லாம் எண்ணிப் பாராது போர் கொண்டு எழுதல் அறிவுடைமை ய்ாகாது. மேலும், அடைந்தாரைக் காக்கும் அருளும், பிழைத்தாரைத் தெளிவிக்கும் அறிவும் உடைய பெரியோனாய நீ, வானுலகோர் வாழ்த்தி வரவேற்க விண்ணுலகம் செல்ல வேண்டுமேயன்றி, மக்களைப் பகைத்து மாண்டான் எனப் பிறர் பழிக்க இறத்தல் கூடாது. ஆகவே, போர் ஒழித்துப் பேரறம் புரிய இன்னே எழுக!” என அவன் உள்ளம் கொள்ளும் அறவுரையினை அழகாக எடுத்துக் கூறினார்.

புலவர் கூறிய பொன்னுரை கேட்ட கோப் பெருஞ்சோழன், போர் புரியும் எண்ணத்தைக் கை விட்டான். ஆயினும், மக்கள்தம் மாண்பிலாச் செயலால் மனம் வருந்தினான்; பெற்றவனைப் பகைக்கும் மக்களைப் பெற்றவன் என்ற பழிச்சொல் கேட்டு நாணினான்; அவன் உள்ளம் மானம் இழந்து வாழ மறுத்தது. தனக்கு நேர்ந்த அப்பழிச் சொல் தன் பகையரசர் காதுகளில் சென்று புகு முன்னரே, உயிர்விடத் துணிந்தான்.

தன் அவைப் புலவர்களை அழைத்தான்; தன் அகத்தெழுந்த கருத்தினைத் தெரிவித்தான்; வடக்கிருந்து உயிர்விடத் துணிந்ததை வகுத்துரைத்தான். அரசன் கொண்டது அறநெறியே யாயினும், அவன் போலும், சிறந்த அரசனை இழக்க அவர்