பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 புலவர் கா. கோவிந்தன்



கூடாதோ?’ என்றெல்லாம் ஐயங் கொண்டு, அவற்றில் தெளிவு பெற மாட்டாது அழிவர். யான், அவர் போலும், தெளிவிலா அறிவுடையேனல்லேன். நல்லதன் நலனும், தீயதன் தீமையும் தெளிய உணர்ந்த யான், வடக்கிருந்து உயிர்விட்டு, வாரா நெறியடையும் நல்வினையினை இன்றே புரியத் துணிந்தேன். ஆகவே புலவர்காள்! அதற்கு ஆவன புரிவீராக!” என அறவுரை கூறி வேண்டி நின்றான்.

அரசன் அறிவித்த அறவுரையினைப் புலவர்களும் அறிவர். ஆதலின், வடக்கிருக்கத் துணிந்த வேந்தனைத் தடை செய்யாது, அவனோடு தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தனர். ஆனால், அவருள் பொத்தியார்தம் அருமை மனைவியார், அக் காலை மகப்பெறும் நிலையில் உள்ளார் என அறிந்த அரசன், அந்நிலையில் அவர் அவளுக்குத் துணையாக இருப்பதை விடுத்து, வடக்கிருந்து உயிர் விடுதல் அறமாகாது என உணர்ந்து, அவரை மட்டும், அது கழிந்து வந்து வடக்கிருக்குமாறு வேண்டிக் கொண்டான். உடனே அவர் நீங்கவுள்ள அனைவர்க்கும், காவிரியாற்றின் இடையே, ஆற்றிடைக் குறையொன்றில், வடக்கிருத்தற்காம் இடம் வகுப்பாராயினர்.

அந்நிலையில், ஆங்கு இடம் அமைக்கும் பணி மேற்கொண்டிருந்தார்.பால், கோப்பெருஞ் சோழன் சென்று, இடம் அமைக்குங்கால், தனக்கு அமைக்கும் இடத்தை அடுத்துத் தன் ஆருயிர் நண்பராய பிசிராந்தையார்க்கும் இடம் அமைக்குமாறு