பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
நல்லுருத்திரன்

சோழர் குடியிற் பிறந்து, செந்தமிழ் வளர்த்த அரசர்களுள் நல்லுருத்திரனும் ஒருவன். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றிப் புகழப்படும் கலித்தொகைக்கண், முல்லைத் திணை குறித்த பாக்கள் பதினேழு பாடிய புலவன், நம் நல்லுருத்திரன். அதில், காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்து மக்களாகிய ஆயர்களின் அகவாழ்க்கையினை அழகுறப் பாடிப் பாராட்டியுள்ளான்.

ஆயர்கள் ஆடு, மாடு, எருமை முதலாயின காத்தல், வரகு போன்ற புன்செய்ப் பொருள்களைச் செய்தல் ஆய தொழில்களை மேற்கொள்வர். ஆயர்கள் தம் வாழ்க்கையினை வகுத்துரைப்பார்போல், அவ்வாயர் மகளிர் தம் கற்பு மாண்பினைக் காவியப் பொருளாக்கிப் பாடுவதே முல்லைத் திணையாம். முல்லைத் திணையைப் பாடிய உருத்திரன் மரம் பல செறிந்த முல்லை நிலக் காட்சியைக் காட்டுகின்றான். தந்தை நிரை மேய்ப்பான்; தாய் தினை கொய்வாள்; அண்ணன் பயிர் செய்வான்; மகள் நிரை மேய்க்கும்