பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 75



முழங்கப் பெறாமல், வறிதே அவர் அரண்மனையின் ஒருபால் கிடத்தல் வேண்டும் என்ற விழைவுடையான்.

அத்தகைய நாட்டாசையும், போர் வேட்கையும் உடைய அவன்பால், அவற்றைக் குறைவற நிறைவேற்றித் தரவல்ல, நனிமிகப் பெரிய நாற்படையும் இருந்தது. நலங்கிள்ளியின் நாற்படைப் பெருமை அதை நேரிற் பார்த்தார்க்கல்லது, பிறர் கூறக் கேட்டார்க்குத் தெரியாது. அப்படை, பகைவர் நாடு நோக்கிச் செல்லுங்கால், ஒரு பனந்தோப்பின் இடையே நுழைந்து செல்ல வேண்டி நேரின், அப்படையின் முற்பகுதியில் செல்வார் பனை நுங்கு உண்டு செல்வர். படை வரிசையின் இடைப் பகுதி ஆண்டு வருங்கால், பனங்காய் முற்றிப் பழமாய் மாறிவிடும். ஆதலின், அவ்விடைப் பகுதியில் வரும் வீரர், பனம்பழம் உண்டு செல்வர். படை வரிசையின் ஈற்றில் நிற்பார் ஆண்டு வருங்கால், பழக்காலம் பழங்காலமாய்க் கழிய, கிழங்குக் காலமாம்; ஆக, படையின் ஈற்றுப் பகுதியில் வருவார் பனங்கிழங்கு உண்டு களிப்பர். நலங்கிள்ளியின் நாற்படை அத்துணைப் பெரியது. அவன் படை பெரிது என்பது மட்டுமன்று; ஆண்மையில், ஆற்றலில், போர் வேட்கையில், அது, அவனிற் குறைபாடு உடையதன்று. பகைவர் நாடு, காடும் மலையும், ஆறும் ஊரும் இடையே கிடக்க, மிக மிகச் சேய்மைக் கண் உளது; அவ்விடம் சென்று சேர்வது எவ்வாறு எனச் சோர்ந்து போகாது, போர் என்றவுடனே உள்ளம் பூரிக்கும் ளைக்கம் உடையது. வெற்றிப் புகழ்பால் வேட்கையும்,