பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 77



என்பதை அறிந்த அவன், நெடுங்கிள்ளி உறையூர் செல்லாவாறு, அவனை அவன் வாழும் ஆவூர்க் கோட்டையிலேயே அழித்துவிடத் துணிந்தான். அவ்வாறே, பெரும்படை யொன்றும் புகாரினின்றும் புறப்பட்டுச் சென்று, ஆவூர்க் கோட்டையினைத் திடுமென வளைத்துக் கொண்டது. நலங்கிள்ளியின் நினைப்பறியாத நெடுங்கிள்ளி, அவன் படை எதிர்பாரா நிலையில் தன் ஆவூர்க் கோட்டையினை முற்றிக் கொண்டதறிந்து, செய்வதறியாது திகைத்தான்: நலங்கிள்ளியின் நாற்படையினை எதிர்த்து நிற்பது தன் படைக்கு இயலாது என்பதறிந்த அவன், ஆவூர்க் கோட்டையினுள்ளே அடங்கியிருந்தான். உள்ளிருப் பார்க்கு நெடுநாளைக்கு வேண்டும் உணவு முதலாம் இன்றியமையாப் பொருளைப் பெற மாட்டாது நெடுங்கிள்ளி வெளிப்படுவன் என நலங்கிள்ளி எதிர் நோக்கி முற்றியிருந்தான். அவன் எதிர்பார்த்தது எய்தி விட்டது. உள்ளிருப்போர்க்கு ஒன்றும் கிடைத்திலது. உணவும், உண்ணும் நீரும் பெறாது யானைகள். வருந்தின. பால் கிடைக்கப் பெறாது குழந்தைகள் கதறின; மகளிர் மகிழ்ச்சி அற்றனர்; வறுமை வாட்டிற்று; மக்கள் மனம் குன்றினர். இந்நிலையினை அறிந்தார் கோவூர்க் கிழார் என்ற புலவர். அரணுள் புகுந்து அரசனைக் கண்டார். “அரசே! ஆற்றல் இருந்தால் பகைவனை அழித்து வெற்றி கொள்; அதற்கு வாய்ப்பு இல்லையேல், வந்தானுக்கு வழிவிட்டு வெளியேறு; இரண்டும் செய்யாது இங்குள்ளார் வருந்த