பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 புலவர் கா. கோவிந்தன்



அடைத்திருத்தல் ஆண்மையோ, அறமோ ஆகாது!” என்று அறவுரை கூறினார். புலவர் நல்லுரை கேட்ட நெடுங்கிள்ளி, அரணைக் கைவிட்டு வெளியேறினான். அழிவு சிறிதும் நேராதே, ஆவூர்க் கோட்டை நலங்கிள்ளியின் உடைமையாயிற்று.

நெடுங்கிள்ளி, ஆவூர்க் கோட்டையினைக் கை விட்டுச் சென்றானேனும், உறையூர்க் கோட்டைபால் அவன் உள்ளம் கொண்ட வேட்கையினை விட்டானல்லன். உடனே விரைந்து சென்று, வேண்டும் பொருள்களோடு உறையூர்ப் புகுந்து, வாயிற் கதவடைத்துக் கொண்டு உள்ளிருப்பானாயினன். நலங்கிள்ளி, உறையூர் அரியணைபால் சென்ற உள்ளமுடையேனேயன்றி ஆவூர்க் கோட்டைபால் ஆசையுடையானல்லன். அதனால், ஆவூர்க் கோட் டையை விடுத்து அடங்கியிருப்பான்போல நடந்து, உறையூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்ட நெடுங்கிள்ளியின் செயல் கண்டு கடுஞ்சினம் கொண்டான். உடனே, பெரும் படையோடு, ஆவூர் விட்டெழுந்து, உறையூர் அடைந்து அரணைச் சுற்றி வளைத்துக் கொண்டான்.

நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் மீண்டும் பகைத்தெழுந்ததைக் கோவூர்க் கிழார் கண்டார். ஆவூர்ப் போரைத் தடுத்து அழிவு நிகழாவண்ணம் காத்து வெற்றி பெற்ற அவர், உறையூர்ப் போரையும் ஒழித்து உயர்வு பெற எண்ணினார். உறையூருக்கு விரைந்து சென்றார். கோட்டையை முற்றி நிற்கும்