பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 புலவர் கா. கோவிந்தன்



ஆனால், அந்தோ! இவர் உரைத்த அறவுரை அதற்குரிய பயனைப் பெறாது போயிற்று. நலங்கிள்ளி புலவர் தம் பொருள் பொதிந்த அறவுரைகளைப் பொன்னே போல் போற்றும் இயல்புடையனே யாயினும், உறையூர் அரசுரிமையினை அடைவதில் அவன் கொண்டிருந்த ஆர்வத்தால், புலவர் சொல்லை. ஏற்க மறுத்து விட்டான். உறையூர்க் கோட்டையை விடாது முற்றி, உள்ளிருப்போனை வென்று அழித்து விட்டு உறையூர் அரியணையில் அமர்ந்து உள்ளம் அடங்கினான்.

இவ்வாறு பேரரசுகள் எல்லாம் பணிந்து திறைதரப் பாராண்ட பெருவேந்தனாய நலங்கிள்ளி, பெற்ற பேரரசைப் போற்றிக் காக்க வல்ல ஊக்கமும் உரனும், அப்பேரரசில் வாழ்வார் அனைவரும், “அறநெறி பிறழா அன்புடையான் எம் அரசன்!” எனப் போற்றிப் புகழ நாடாளும் நன்னெறியும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற நல்லோனாவன். நாட்டவர் போற்ற நெடிது ஆண்ட அவன், அவ்வாறு, ஆளற்காம் நல்லறிவும் நன்கு வாய்க்கப் பெற்றிருந்தான். அத்தகைய நல்லறிவினைத் தான் பெற்றிருந்ததோடு, அதை நாடாளும் உரிமை பெற்றார் ஒவ்வொருவரும் உணர்ந்து உயர்வடைதல் வேண்டும் எனும் உள்ளமுடையனாய்த் தான் பெற்ற அந்நல்லறிவினை நயமிக்க பாட்டொன்றில் அமைத்து அளித்துள்ளான்.

உழைத்துப் பொருள் தேடி உண்ண எண்ணாது, தலைமுறை தலைமுறையாகத் தன் முன்னோர் ஈட்டி